நன்மைகள்:-
1. பண்ணைக் கீரையுடன் ஓமம் (சிறிதளவு) சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் வயிறு மந்தம் தீரும்.
2. பண்ணைக் கீரையை அரைத்துப் பற்றுப்போட்டால் படை உள்ளிட்ட தோல் நோய்கள் குணமாகும்.
3. பண்ணைக் கீரையை அரைத்துச் சாறு எடுத்து புண்கள் மீது தடவினால் அவை குணமாகும்.
4. பண்ணைக் கீரையை, துவரம் பருப்பு சேர்த்துக் கடைந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் குணமாகும்.
5. மாதவிலக்கின் போது ரத்தப்போக்கு அதிகமாக இருக்கும் போது, பண்ணைக் கீரையைச் சமைத்துச் சாப்பிட்டு வந்தால் அதிகப்படியான ரத்தப்போக்கு கட்டுப்படும்.
6. பண்ணைக் கீரையை உணவில் அடிக்கடி சேர்த்துச் சமைத்து சாப்பிட்டு வந்தால், ஜீரண மண்டல உறுப்புகள் அனைத்தும் பலம் பெறும்.
7. பண்ணைக் கீரையுடன் சிறிது சீரகம் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் சொட்டுச் சொட்டாக சிறுநீர் வெளியேறுவது (சிறுநீர் ஒழுக்கு) நிற்கும்.
Tags:
SPINACH