Coconut Oil - தேங்காய் எண்ணெய் பயன்கள் மற்றும் மருத்துவ குணங்கள்


வரலாறு:-

தேங்காய் எண்ணெய் (coconut oil) என்பது சமையலின்போது பயன்படுத்தப்படக்கூடிய ஒரு வகை எண்ணெயாகும். இந்த எண்ணெய் முற்றிய தேங்காயில் இருந்து தயாரிக்கப்படுகின்றது. தேங்காயில் அதிகப்படியான செறிவூட்டப்பட்ட கொழுப்பு உள்ளதால் ஆக்சிசனேற்றம் மெதுவாக நடக்கிறது. இதன் காரணமாக தேங்காய் 24° செல்சியசில் (75° பாரன்கீட்) இருக்கும் போது ஆறு மாதங்கள் வரை தேங்காய் கெட்டுப் போகாமல் தடுக்கப்படுகிறது.


ஊட்டச்சத்து:-

100 கிராமில் உள்ள ஊட்டச் சத்து
மாப்பொருள் - 15.23 g
சர்க்கரை - 6.23 g
நார்ப்பொருள் (உணவு) - 9.0 g
கொழுப்பு - 33.49 g
புரதம் - 3.3 g
தயமின் - 0.066 mg
ரிபோஃபிளாவின் - 0.02 mg
நியாசின் - 0.54 mg
பான்டோதெனிக் அமிலம் - 0.300 mg
உயிர்ச்சத்து பி6 - 0.054 mg
இலைக்காடி (உயிர்ச்சத்து பி9) - 26 mg
உயிர்ச்சத்து சி - 3.3 mg
கால்சியம் - 14 mg
இரும்பு - 2.43 mg
மக்னீசியம் - 32 mg
பாசுபரசு - 113 mg
பொட்டாசியம் - 356 mg
துத்தநாகம் - 1.1 mg


நன்மைகள்:-

1. தேங்காய் எண்ணெய் வெயிலில் இருந்து சருமத்தை பாதுகாப்பதில் தேங்காய் எண்ணெய்க்கு ஈடு இணையில்லை. வெளியே கிளம்புவதற்கு அரைமணி நேரத்திற்கு முன்னதாக லைட்டாக தேங்காய் எண்ணெயை சருமத்தில் பூசுங்கள். சருமம் பாதிக்கப்படாது. இது சிறந்த சன்ஸ்கிரீன் லோசன். சருமம் மென்மையடைவதோடு வெயிலில் கருப்பதை தடுக்கும்.

சரும பாதுகாப்பு:
1. சரும வறட்சியை போக்குவதில் சிறந்த மாய்ஸரைசராக செயல்படுகிறது.

2. இதில் உள்ள கொழுப்புச்சத்து சரும சுருக்கத்தை போக்குகிறது. இதனால் சருமத்திற்கு எவ்வித பக்கவிளைவும் ஏற்படுவதில்லை.

வறண்ட தலை பகுதிக்கு:
தேங்காய் எண்ணெய் தலையின் தோல் பகுதியை வறண்டு விடாமல் பாதுகாக்கும். மேலும், குளிப்பதற்கு முன்பும் தேங்காய் எண்ணெயை உடல் முழுவதும் பூசிக் கொண்டு ஊறவிட்டுக் குளிக்கலாம்.

கூந்தல் பாதுகாப்பு:
இந்த எண்ணெயை வாரம் ஒருமுறை தலையில் ஊறவைத்து குளிப்பதன் மூலம் கூந்தலின் வேர்க்கால்கள் பலமடையும், பொடுகுத் தொல்லைக்கு நிவாரணம் கிடைக்கும்.

மன அழுத்தத்திற்கு:
மன அழுத்தம் நீக்கும். பணிச்சூழல் காரணமாக மன அழுத்தம் ஏற்படுவது இயல்பு. இதனால் முகமானது களை இழந்து காணப்படும். தேங்காய் எண்ணெய் மன அழுத்தம் நீக்கி முகத்தை பொலிவாக்குகிறது. தேங்காய் எண்ணெயை ஊற்றி மசாஜ் செய்வதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற வலிகள் நீங்கும். தோல் நோய்கள் நீக்கும்.

தோல் பாதுகாப்பு:
தேங்காய் எண்ணெயில் உள்ள பாக்டீரியா எதிர்ப்புப் பொருள் தோல் பூஞ்சை நோய்களை கட்டுப்படுத்துகிறது. உடலுக்கு மட்டுமல்லாது குடலுக்கும் பாதுகாப்பு தருகிறது. ஜீரண சக்தியை சீராக்கி மலச்சிக்கலை நீக்குகிறது. இதனால் தோல்களில் மற்றும் முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள் நீங்குகிறது.

முகம் அழகிற்கு:
ஒப்பனை(makeup) செய்யும் பெண்கள், இரவில் முகத்தை சுத்தம் செய்து விட்டு தேங்காய் எண்ணெயை தடவிக் கொண்டு படுக்கலாம். இதனால் சருமத்திற்கு நல்ல பொலிவு கிடைக்கும். கேரள மாநிலத்தில் இன்றைக்கும் தேங்காய் எண்ணெயின் பயன்பாடு அதிகம் உள்ளது. மேனிக்கு உபயோகப்படுத்துவதோடு அன்றாட சமையலுக்கும் தேங்காய் எண்ணெய் உபயோகிப்பதே அவர்களின் ரகசியமாகவும் உள்ளது.





 

Sobiya Sofi

You Hate When People See You Cry Because You Want To Be That Strong Girl. At The Same Time, Though, You Hate How Nobody Notices How Torn Apart And Broken You Are.

Post a Comment

Previous Post Next Post