வரலாறு:-
சிறுகுறிஞ்சா அல்லது கோகிலம் (Gymnema sylvestre) என்பது தென், மத்திய இந்தியா மற்றும் இலங்கையின் வெப்பமண்டலக் காடுகளை தாயகமாகக் கொண்ட மூலிகைச் செடி. இதன் இலைகளை அசைபோட்டால் இனிப்புச் சுவையை குறைத்துவிடும். இதற்கான காரணம் அதிலுள்ள ஜிம்னேமிக் அமிலமாகும். இது கிட்டத்தட்ட இரண்டாயிரம் வருடங்களாக நீரிழிவு நோய்க்கு பரிகாரமளிக்கும் மூலிகையாகப் பாவிக்கப்பட்டு வருகின்றது. ஆயினும், போதியளவு அறிவியல் ஆதாரங்கள் இதனை நிரூபிக்கவில்லை.
நன்மைகள்:-
1. சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து இடித்து சலித்து சிறுகுறிஞ்சாத்தூள் உள்ள அளவிற்கு இந்தத் தூளையும் சேர்த்து நன்றாகக் கலக்கி ஒரு சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு, காலை மாலை ஒரு தேக்கரண்டியளவு தூளை எடுத்து வாயில் போட்டுச் சிறிதளவு வெந்நீர் குடிக்க வேண்டும். தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட நீரிழிவு குணமாகும்.
2. இந்த மூலிகை சர்க்கரை நோயை குணப்படுத்த கூடியது. இந்த மூலிகையை காயவைத்து அரைத்து அதில் பாதி அளவு திப்பிலியை அரைத்து கலந்துகொள்ள வேண்டும். இதனை தினமும் ஒருமாத்திரை அளவு உட்கொண்டு வரவேண்டும். இதனை உட்கொண்ட பின்னர் பால் அருந்தவேண்டும். இது மூலிகையின் சக்தியை அதிகரிக்கும்.
3. இது சர்க்கரையை குறைக்கும் போது உடல் பலவீனம் ஏற்படும். அதனைப் போக்க ஆட்டுக்கால் சூப்வைத்துக் குடிக்கலாம்.
Tags:
LEAVES