வரலாறு:-
மணித்தக்காளி அல்லது மணத்தக்காளி என்பது சொலனேஸி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவரமாகும்.
ஊட்டச்சத்து:-
சுண்ணாம்புச் சத்தும், இரும்புச் சத்தும் நிறைந்துள்ள
நன்மைகள்:-
1. மணத்தக்காளிக் கீரை வாய்ப்புண், குடல்புண்ணை போக்க கூடியது. அல்சர் என்னும் வயிற்றுப் புண்ணிற்கு மகிச்சிறந்த மருந்தாக இக்கீரை பயன்படுகிறது.
2. மணத்தக்காளிக் கீரையை உணவுடன் சேர்த்து எடுத்துக்கொண்டால் உடல் குளிர்ச்சியடையும். குறிப்பாக பூப்பெய்திய காலத்தில் சிறுமிகளுக்கு கொடுத்து வரலாம்.
3. வாரம் இரு முறை மணத்தக்காளியை உண்டு வர கடுமையான உழைப்பின் காரணமாக உடல் உள்ளுறுப்புகளில் ஏற்படும் அழற்சியைப் போக்கலாம்.
4. இருதயத்தின் செயல்பாடு வலிமை கூடும்.
5. களைப்பை நீக்கி நல்ல உறக்கத்தைக் கொடுக்கும்.
6. மலச்சிக்கலிலிருந்து நிவாரணம் அளிக்கும்.
7. கண்பார்வை தெளிவு பெறும்.
8. வயிற்று நோய், வயிறு ஊபுசம், வாய்வுத் தொல்லை உடையவர்கள் மணதக்காளிக்கீரையை சமைத்து உண்டால் நோய்க் கட்டுப்பாட்டுக்குள் வரும்.
9. கீரையுடன் தேங்காய் சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் குடல் புண், மற்றும் சிறுநீர்ப்பை எரிச்சல் போன்ற பிரச்சனைகள் நீங்கும்.
10. மணத்தக்காளி வற்றல் வாந்தியைப் போக்கி பசியின்மையைப் போக்கும்.
11. கீரைப்பூச்சி என்ற தொல்லை ஏற்பட்டால் மணத்தக்காளி அதனை வெளியேற்றும்.
12. மணத்தக்காளிக் கீரைக்கு குரலை இனிமையாக்கும் குணமும் உண்டு.
13. கருப்பையில் கருவலிமை பெறவும், பிரசவத்தை எளிமைப்படுத்தவும் இக்கீரை உதவுகிறது.
14. மணத்தக்காளியின் வேர் மலச்சிக்கலை நீக்கும் மருந்துகளில் சேர்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
SPINACH