நன்மைகள்:-
1. மணலிக் கீரை, துளசி, வில்வம் இவை மூன்றையும் சம அளவு எடுத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் இரவு நேரத்தில் 2 கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் நன்றாகத் தூக்கம் வரும்.
2. ஞாபக மறதிக்கு முக்கிய காரணம் பித்த அதிகரிப்பே காரணம் ஆகும். மேலும் மூளைக்குத் தேவையான சத்து குறைவதாலும் இப்பிரச்சனை ஏற்படுகிறது. இப்பிரச்சனை தீருவதற்கு மணலிக்கீரையை மசியல் செய்து சாப்பிட வேண்டும்.
3. மணலிக்கீரை வதக்கி சாப்பிட்டால் மூளை நரம்புகள் பலப்படும்.
4. மணலிக்கீரையை கஷாயம் செய்து குடித்தால் ஈரல் பலப்படும்.
5. மணலிக் கீரை சாற்றில் சீரகத்தை ஊறவைத்து, உலர்த்திப் பொடியாக்கி, தினமும் காலை மாலை என இருவேளையும் சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் சீராகும்.
6. மணலிக் கீரைச் சாற்றில் உலர்ந்த திராட்சையைச் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குணமாகும்.
7. மணலிக் கீரையுடன், மிளகு சேர்த்துக் கஷாயமாக்கிச் சாப்பிட்டு வந்தால் மூக்கில் இருந்து நீர் கொட்டுதல் குணமாகும்.
8. மணலிக் கீரையை மிளகு, பூண்டு, மஞ்சள், ஓமம் ஆகியவற்றோடு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் மூட்டு வலிகள், வாத வலிகள் போன்றவை குணமாகும்.
9. மணலிக்கீரையின் வேர், இலைகளை நீர் விட்டு நன்கு அரைத்து அதில் 70 கிராம் அளவு எடுத்து நீரில் கலக்கி அதிகாலையில் வெறும் வயிற்றில் பருகினால் குடலில் உள்ள தட்டைப்புழுக்கள் குறையும். மார்புசளி வயிற்றுப்புண் குணமாகும்.
10. மணலிக்கீரையின் இலை, தண்டு, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக்குணம் வாய்ந்தது. மணலிக்கீரையை பாசிபருப்புடன் சேர்த்து கூட்டு தயார் செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும்.
11. மணலிக் கீரையை உலர்த்திப் பொடியாக்கி, தினமும் காலை, மாலை என இரு வேளையும் 2 கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் மன உளைச்சல், மன அழுத்தம், மனநலக் கோளாறுகள் குணமாகும்.
Tags:
SPINACH