வரலாறு:-
துவரை (Cajanus cajan) என்பது Fabaceae குடும்பத்தைச் சார்ந்த ஒரு தாவரம். இதன் பருப்பே துவரம் பருப்பு ஆகும். ஆசியாவில் முதலிற் பயிரிடப்பட்டதாகக் கருதப்படும் இது, இப்போது உலகின் பல பாகங்களிலும் பயிரிடப்படுகிறது. தமிழர் சமையலிலும் துவரம் பருப்பு முக்கிய உணவுப்பொருளாக அமைகிறது
ஊட்டச்சத்து:-
புரோட்டீன், ஃபோலிக் ஆசிட், காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து.
நன்மைகள்:-
1. துவரம் பருப்பு - 50 கிராம், அரிசி - 200 கிராம், பூண்டு - 3 பல், மிளகு - 20, சீரகம் - 20, மஞ்சள் - 4 சிட்டிகை ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து கஞ்சி காய்ச்சி குடித்தால் காய்ச்சல் உடனே குணமாகும்.
2. துவரம் பருப்புடன், முட்டைக்கோஸை அரிந்துபோட்டு வேகவைத்துக் கடைந்து சாப்பிட்டால் இளைத்த உடல் பெருக்கும்.
3. குடல் புண்ணும் குணமாகும். துவரை இலையை வேகவைத்து அந்தத் தண்ணீரை வலி உள்ள இடத்தில் ஊற்றிக் கழுவினால் வலி, வீக்கம் போன்றவை குணமாகும்.
4. துவரை இலை, உளுந்து இரண்டையும் முட்டையின் வெள்ளைக் கரு சேர்த்து அரைத்துப் பற்றுப்போட்டால் உடைந்த எலும்புகள் விரைவில் கூடும்.
5. மேலும் இதில் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், குடலியக்கம் சீராக இருந்து, மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுவதை தடுக்கலாம்.
6. இது இரத்த குழாய் விரிப்பானாகச் செயல்பட்டு இரத்த ஓட்டத்தை சீராக நடைபெறச் செய்கிறது. இதனால் இரத்த அழுத்தம் குறைந்து, உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
7. துவரம் பருப்பில் உள்ள பொட்டாசியம், நார்ச்சத்து, குறைந்தளவு கொழுப்புச்சத்து ஆகியவை இதயநலத்தை மேம்படுத்துகிறது.
Tags:
CEREEALS