வரலாறு:-
கருணை, அல்லது பூமி சல்லரைக்கிழங்கு (Amorphophallus paeoniifolius) என்பது பூக்கும் தாவரங்களில் சேனைக்கிழங்குகளில் ஒரு வகையாகும். இவ்வகையான தாவரங்கள் பொதுவாக வெப்பக் காடுகளில் உற்பத்தியாகும் காய்கறி வகையாகும். பசுபிக்குத் தீவுகள், தென்கிழக்காசியா, தெற்கு ஆசியா, தென்கிழக்காசியா போன்ற பகுதிகளில் அதிகமாகச் சமையலுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு பணப்பயிராக உற்பத்தி செய்யப்படுகிறது.
ஊட்டச்சத்து:-
மாங்கனீஸ், மினரல்ஸ், ரிபோபிளேவின், பொட்டாசியம், இரும்பு, போன்ற சத்துக்கள் உள்ளன.
வைட்டமின்:-
வைட்டமின் சி, வைட்டமின் பி.
நன்மைகள்:-
1. சீரண சக்தியைத் துரிதப்படுத்தும்; அதோடு அந்த உறுப்புகளுக்கும் பலத்தைக் கொடுக்கும்.
2. உடல் உஷ்ண மிகுதியால் ஏற்படும் நோய்களில் இருந்து காக்க வல்லது. இதனால் மூலச்சூடு, எரிச்சல் இருந்தாலும் நீங்கும். மலச்சிக்கலையும் போக்கும். நாட்பட்ட காய்ச்சல் இருந்தாலும் குணமாகும்.
3. பெண்களுக்குத் தொல்லை கொடுக்கும் நோய்களில் வெள்ளைப்பாடு என்ற நோய்க்குக் கைகண்ட மருந்தாக உதவுகிறது இந்தக் கிழங்கு.
4. உடல்வலி இருந்தால் கூடப் போக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.
5. சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் கருணைக் கிழங்கு லேகியம் பிரசித்தி பெற்றது. மூல நோய்க்கு மருந்தாகும்.
6.மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலி மற்றும் மாதவிடாய் ஏற்படுவதில் பிரச்சனை போன்றவை சீராகும்.
7. எலும்புகள் பலவீனம். கருத்தரித்தலில் ஏற்படும் பிரச்சனை. ஆற்றலை அதிகரித்தல்.
8. கருணைக்கிழங்கு சாப்பிடுவதால் கபம், வாதம், ரத்த மூலம், முளை மூலம் ஆகியன குணப்படுகின்றன. மேலும் கருணைக்கிழங்கு பசியைத் தூண்டி இரைப்பைக்கு பலம் சேர்க்கும்.
9. மூல நோயை குணப்படுத்தும், ஆசன வாயிலில் ஏற்பட்டுள்ள முளைகளைச் சிறிது சிறிதாகக் கரைத்து மூலத்தை வேரோடு களைந்து குணப்படுத்தும்.
10. ஒருமாதம் வரை வேறு உணவு ஒன்றையும் சாப்பிடாமல் கருணைக் கிழங்கை மாத்திரம் வேக வைத்து அப்படியே உணவாக சாப்பிடவும், நாக்கில் ஏற்படும் வறட்சி மாற மோர் மட்டுமே சாப்பிட்டு வர மூலம் பூரணமாகக் குணமாகிவிடும்.
Tags:
TUBER