வரலாறு:-
கொள்ளு/கொள் (Macrotyloma uniflorum) என்பது ஒருவகை பயறு வகையாகும். இதனைத் தென் தமிழகத்தில் காணம் எனவும் விளிக்கின்றனர். இதற்கு வேறு பெயர்களாக முதிரை என அழைப்பதும் உண்டு.
ஊட்டச்சத்து:-
இரும்பு, கால்சியம் (சுண்ணம்), மாலிப்டினம், பலபீனால்கள்,பொட்டசியம்.
வைட்டமின்:-
வைட்டமின் ஏ, பி மற்றும் சி.
நன்மைகள்:-
1. இதனை சித்த மற்றும் ஆயுர்வேதத்தில் சிறுநீரகக் கற்களை கரைப்பதற்கும், மூலநோயிற்கும், இரத்தக்கட்டிற்கும் மருந்தாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
2. இதில் இரும்பு, கால்சியம் (சுண்ணம்), மாலிப்டினம், பலபீனால்கள் உள்ளடக்கியுள்ளது. இவை தீங்கு விளைவிக்கும் ஆக்சிசனை தடுத்து நமது உடற்கலங்களுக்கு/உயிரணுக்களுக்கு பாதுகாப்பளிக்கிறது.
3. இதற்கு உடலில் உள்ள கொழுப்பைக் கரைத்து உடலை இறுக்கும் ஆற்றலுள்ளதாகவும் அறியப்படுகிறது.
4. தொந்தி மற்றும் இதய நோயுள்ளவர்களுக்கு இது நல்ல மருந்தாகும்.
5. இதனை சளி மற்றும் கோழையால் அவதியுறுபவர்களுக்கு உணவாகக் கொடுப்பதன் மூலம், சளியை உடலில் இருந்து வெளியேற்ற உதவுகிறது.
6. பெண்களின் மாதவிடாய்க் கோளாறுகளுக்கு இது மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.
7. இதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, அமினோ அமிலங்கள் உள்ளன. இவை ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, மலட்டுத்தன்மையை நீக்க உதவுபவை.
Tags:
CEREEALS