வரலாறு:-
கரிசலாங்கண்ணி, வெண்கரிசாலை அல்லது கையாந்தகரை (Eclipta prostrata) ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். இதில் இருவகை உண்டு. மஞ்சள் கரிசலாங்கண்ணி, வெள்ளை கரிசலாங்கண்ணி. மஞ்சள் கரிசலாங்கண்ணியை, அதன் மஞ்சள் நிற பூக்களை வைத்து அடையாளம் காணலாம். வெள்ளை கரிசலாங்கண்ணியை, அதன் வெள்ளைநிற பூக்களை வைத்து அடையாளம் காணலாம். இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் காணப்படும் இது ஓராண்டுத் தாவரமாகும்.
ஊட்டச்சத்து:-
100 கிராம் கரிசலாங்கண்ணி இலைச்சாற்றில்:
நீர்- 85%
மாவுப்பொருள் - 9.2%
புரதம் - 4.4%
கொழுப்பு - 0.8%
கால்சியம் - 62 யூனிட்
இரும்புத் தாது - 8.9 யூனிட்
பாஸ்பரஸ் - 4.62%
நன்மைகள்:-
1. கசப்புச் சுவையுடைய இக்கீரை அதிக உஷ்ணம் கொண்டது.
2. இக்கீரையைச் சமைத்து உண்டால் குஷ்டம், காமாலை வீக்கங்கள், பாண்டு போன்ற நோய்கள் குணமாகும்.
3. மஞ்சள் கரிசலாங்கண்ணியைச் சமைத்து உண்டால் தேக மினுமினுப்பு கூடும். கண் பார்வை மிகும்.
4. குன்ம நோயால் உண்டாகும் கட்டிகள் உடையும். மூளைக்கும் நல்லது.
5. பாம்புக்கடி விஷம் நீங்க, இக்கீரையைச் சாறு பிழிந்து மூன்று அல்லது நான்கு தேக்கரண்டி சாப்பிட்டால் போதும்.
6. சிறு குழந்தைகளுக்கு அடிக்கடி ஜலதோஷம் பிடித்தால், இக்கீரையைச் சாறு பிழிந்து இரண்டு துளிகளும், சுத்தமான தேன் ஏழு துளிகளும் கலந்து குடிக்கத் தரவும். ஜலதோஷம் மாறும்.
7. காதுவலிக்கும் இக்கீரையின் சாற்றை ஓரிரு துளிகள் காதில் விடலாம்.
8. தலைக்கு எண்ணெய் காய்ச்சும்போது அதில் கரிசலாங்கண்ணி கீரையைப் போட்டுக் காய்ச்சித் தேய்த்தால், தலைமுடி கருகருவென்று வளரும். இளநரையும் மாறும். கண்ணுக்கும் குளிர்ச்சி தரும்.
9. இக்கீரையின் வேர்களைப் பொடித்து உண்டால், மண்ணீரல், கல்லீரல் சம்பந்தமான நோய்கள் மாறும்.
Tags:
SPINACH