வரலாறு:-
பாகல் (Momordica charantia) என்பது உணவாகப் பயன்படும் பாகற்காய் என்னும் காயைத் தரும், பாகற்கொடியைக் குறிக்கிறது. இக்கொடி வெள்ளரிக்காய், பூசணிக்காய், தர்ப்பூசணி முதலான நிலைத்திணை (தாவர) வகைகளை உள்ளடக்கிய குக்குர்பிட்டேசியே (Cucurbitaceae) என்னும் பண்படுத்தாத(rouch) செடி, கொடி குடும்பத்தைச் சேர்ந்ததாகும்.
ஊட்டச்சத்து:-
இரும்பு, துத்தநாகம், பொட்டாசியம், மாங்கனீசு மற்றும் மக்னீசியம்.
வைட்டமின்:-
வைட்டமின் பி 3
வைட்டமின் பி 5
வைட்டமின் பி 6
வைட்டமின் சி
நன்மைகள்:-
1. பாகல் இலையை அரைத்து உடம்பெல்லாம் தடவி ஒரு மணி நேரம் ஊறிய பின் குளிக்க வேண்டும். இவ்வண்ணம் மூன்று நாட்கள் செய்து வந்தால் போதும் நாய்க்கடியின் விஷம் உடம்பில் ஏறாது.
2. ஒரு பிடி கொடிப்பாகல் இலையுடன், ஐந்தாறு மிளகைச் சேர்த்து காரமற்ற அம்மியில் அரைத்து, கண்களைச் சுற்றிப் பற்றுப் போட்டு வர, மாலைக்கண் நோய் குணமாகும்.
3. பாகல் இலைச்சாற்றை, வாரம் ஒரு முறை 100 மிலி குடித்து வந்தால், சிறுநீர் சர்க்கரையின் அளவு குறையும்.
4. சிலருக்கு உள்ளங்கால்களில் காலையில் எப்பொழுதும் எரிச்சல் இருக்கும். இவர்கள் பாகல் இலைச் சாற்றை பிழிந்து, இரவு படுக்கப்போகும்போது உள்ளங்கால்களில் தடவி வர எரிச்சல் நீங்கும்.
5. பாகற்காய் “ஜூஸ்” குடித்து வந்தால், செரிமான அமிலம் சுரப்பது மேம்படும்., எனவே பசியும் அதிகரிக்கும். கணைய புற்றுநோய் அணுக்களை அழிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
6. பாகற்காயில் வைட்டமின் சி மிகுதியாக இருப்பதால், சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியாக உள்ளது.
Tags:
LEAVES