Watermelon - தர்ப்பூசணி பழம் பயன்கள் மற்றும் மருத்துவ குணங்கள்


வரலாறு:-

தர்ப்பூசணி அல்லது வத்தகை ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட பூக்கும் தாவரமாகும். இதன் பழம் தர்ப்பூசணிப் பழம், வத்தகப்பழம், கோசாப் பழம் என அழைக்கப்படும். இது வெளிப்புறத் தோல் பகுதி பச்சை, மஞ்சள், சிலவேளை வெள்ளையாகவும், அதன் உட்புறம் சாறாகவும் இனிப்பான சதைப்பகுதியைக் கொண்டு, சிவப்பிலிருந்து மென்சிவப்பாகவும் சிலவேளை மஞ்சளாகவும், பழுக்காதபோது பச்சையாகவும் காணப்படும்.


ஊட்டச்சத்து:-

கலோரி - 86
புரத சத்து - 1.74 கிராம்
நார்ச்சத்து - 1.1 கிராம்
இரும்பு சத்து - 0.69 மில்லி கிராம்
கால்சியம் - 20 மில்லி கிராம்
சோடியம் - 1 மில்லி கிராம்
பொட்டாசியம் - 112 மில்லி கிராம்
சர்க்கரை - 6 கிராம்


வைட்டமின்:-

வைட்டமின் B1, B6, A, C.


நன்மைகள்:-

1. கோடைகாலத்தில் கிடைக்கும் தர்பூசணிப் பழம், உடலுக்குக் குளிர்ச்சியை தருவதோடு, இரும்புச் சத்தும் நிறைந்ததாகும். இதில் இருக்கும் இரும்புச் சத்தின் அளவு, பசலைக் கீரைக்கு சமமானதாகும். மிகச்சிறந்த விட்டமின் C யும் விட்டமின் A (ஒரு துண்டு பழத்தில் 14.59 mg of விட்டமின் C and 556.32 IU of விட்டமின் A) இதில் உண்டு. இதைவிட தேவையான அளவு விட்டமின் B6-ம் விட்டமின் B1-ம், கனிமங்களான potassium and magnesium-மும் உண்டு.

2. விட்டமின் ஏ விட்டமின் சி சத்துகள் உடலிற்கு தேவையாக இன்சூலினை மேம்படுத்தும். இதில் உள்ள மெக்னீசியம் மற்றும் புரதம் கொழுப்பைக் குறைக்க வல்லது. குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தர்பூசணி சாப்பிடுவதன் மூலம் பொட்டாசியத்தை அதிகரித்து கொள்ள முடியும்.

3. இதய நோய்கள் மற்றும் புற்றுநோய் ஆண்டியாக்ஸிடண்ட் லிகோபீனின் போன்ற நோய்களுடன் போராடி வெற்றி பெறும் தன்மை கொண்டது. தர்பூசணி விதையும் பலன் தரகூடியது. தர்பூசணி விதையில் அதிக அளவில் ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளன.

4. தர்பூசணியில் வெறும் தண்ணீர் சத்துதான் உள்ளது. அதில் வேறு சத்து எதுவும் இல்லை என்று கூறி வந்தவர்களுக்கு இந்த புதிய தகவலை இன்ப அதிர்ச்சியாக வெளியிட்டுள்ளார்கள். தர்பூசணிக்கு `ஆசையை’ அதிகரிக்கும் ஆற்றலும் கூட உள்ளதாக கூறுகிறார்கள்.

5. மனித உடலில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் சத்து பொருள்கள் சில காய்கறிகளிலும், பழங்களிலும் உள்ளன. தர்பூசணியில் அதுபோல் உள்ள ‘சிட்ரூலின்’ என்ற சத்துபொருள், வயாகராவை போல் ரத்த நாளங்களை விரிவடைய செய்து, ரத்த ஓட்டத்தை அதிகரிக்குமாம். தர்பூசணியை சாப்பிட்ட பிறகு, ஏற்படும் வேதியல் மாற்றம் காரணமாக ‘சிட்ரூலின்’, ‘அர்ஜினைனாக’ எனும் வேதிப்பொருளாக மாற்றப்படுகிறது. அது இதயத்துக்கும், ரத்த ஓட்டம் சம்பந்தமான உடல் உறுப்புகளையும் ஊக்குவிக்கிறது.

6. இந்த சிட்ரூலின்-அர்ஜினைன் வேதி மாற்றமானது, சர்க்கரை நோய்க்காரர்களுக்கும், இதய நோயாளிகளுக்கும் கூட நன்மை பயக்கும். இதில், முக்கியமானது என்னவென்றால், தர்பூசணியில் உள்ள மேல்பகுதி அதாவது, வெண்மை பகுதியில்தான் ஆண்மையை அதிகரிக்கும் சத்து உள்ளதாம்.

பக்க விளைவுகள்:-

1. அளவுக்கு அதிகமா சாப்பிட்டால் வாந்தி, வயிற்று போக்கு , வீக்கம் மற்றும் அஜீரணம் கோளாறுகள் பிரச்சனைகள் ஏற்படுத்தலம்.


 

Sobiya Sofi

You Hate When People See You Cry Because You Want To Be That Strong Girl. At The Same Time, Though, You Hate How Nobody Notices How Torn Apart And Broken You Are.

Post a Comment

Previous Post Next Post