வரலாறு:-
மஞ்சள், அரிணம் அல்லது பீதம் (Curcuma longa) உணவுப் பொருட்களில் நிறம், சுவை கூட்டியாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தப்படும் பயிராகும். இது 60 முதல் 90 செ.மீ. உயரம் வரை வளரும் ஒரு பூண்டு வகைச்செடி. இதன் இலைகள் கொத்தாக இருக்கும். தண்டில் உள்ள முளையிலிருந்து கிளைத்து மண்ணுக்குள் செல்லும் நீண்ட வேர்தான் மஞ்சள் கிழங்கு. நன்கு உலர்த்தப்பட்ட மஞ்சள் கிழங்கின் விரலை ஒடித்தால் உலோக நாதம் உண்டாகும். இது இந்தியாவின் மிகப் பழமையான நறுமணப் பொருள். இதனை இந்துக்கள் மதச் சடங்குகளின் புனிதப் பொருளாக உபயோகிக்கிறார்கள்.
ஊட்டச்சத்து:-
பொட்டாசியம், மாங்கனிஸ், பொட்டாசியம், இரும்பு, கல்சியம். துத்தநாகம். தாமிரம், மெக்னீசியம்,நியாசின், நிபோபிளவின், பைரிடாக்சின் போன்றவை அடங்கியுள்ளன
வைட்டமின்:-
வைட்டமின் சி
நன்மைகள்:-
1. காய்கறிகளை வாங்கியவுடன் உப்பு மற்றும் மஞ்சள் கலந்த நீரில் கலுவி பயன்படுத்துவதால் மரபனு மாற்றம் செய்யப்பட்ட காய்கறிகளின் தாக்கத்திலிருந்து விடுபடலாம்.
2. உணவுப் பொருட்கள் கெட்டுப்போகாமல் பாதுகாக்கிறது, பல நோய்களுக்கு மருந்தாகவும், நிவாரணியாகவும் பயன்படுகிறது.
3. வயிறு தொடர்பான அனைத்து நோய்களைப் போக்குகிறது,
4. இருமலை நீக்க நெய்யுடன் மஞ்சள் தூளைக் கலந்து பருகலாம்.
5. இறைச்சியின் என்சைம் கெட்டுப் போகாமல் நீண்டநேரம் பாதுகாக்கிறது, நிப்பானில் ஒகினாவா என்னும் இடத்தில் தேனீர் ஆகவும் பயன்படுத்தப்படுகிறது.
6. சளியினால் தொண்டை அடைப்பு ஏற்பட்டால் தேனுடன் மஞ்சள் தூள் கலந்துகாலையும் மாலையும் இரண்டு வேளை சாப்பிட்டால் சளி அடைப்பு சரியாகி விடும்.
7. உடலில் ஏதாவது பாகங்களில் வீக்கம் ஏற்பட்டால் மஞ்சள் தூளையும் வெங்காயத்தையும் சேர்த்து நன்றாக அரைத்து வீக்கத்தில் தடவினால் குணமாகி விடும்.
8. மஞ்சள் தூளுடன் எலுமிச்சை சாறு கலந்து அம்மை நோயினால் ஏற்பட்டதழும்புகளில் தடவினால் செம் புள்ளிகள் மறையும்.
9. சருமத்தில் ஏற்படும் அரிப்பு தேமல் போன்றவற்றிற்கு மஞ்சளுடன் வேப்பிலை கொழுந்து சேர்த்து அரைத்துப் பூசி வந்தால் சருமத்தில் உள்ள நோய்கள் குணமாகும்.
10. சளித் தொல்லையில் இருந்து விடுபட நன்றாக காச்சிய பாலில் மஞ்சள் தூள் கலந்து சாப்பிடலாம். தண்ணீரை இளம் சூடாக்கி அதில் மஞ்சள் தூள் சிறிது உப்புக் கலந்து மூன்று வேளை கொப்பளித்து வந்தால் முரசு கரைதல் குணமாகும்.
11. மஞ்சள் தூளுடன் உப்பும் எலுமிச்சை சாறும் சேர்த்துப் பூசினால் புண், உரசல் காயங்கள், மூட்டு உளைச்சலென்பவை குணமாகும்.
12. பெருங்காய தூளையும் மஞ்சள் தூளையும் நீரில் கலந்து கொதிக்க வைத்து வேது பிடித்தால் ஒற்றைத் தலைவலி குணமாகும் கெட்ட கொழுப்புக்களைக் கட்டுப்படுத்தும்.
13. இதில் கர்குமின் அடர்த்தியான ஆரஞ்சு நிறம் கொண்ட வேதிப் பொருள் உள்ளது, இது புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டது.
14. மூக்கடைப்பு ஏற்பட்டால் மஞ்சளைச் சுட்டு அதன் புகையை நுகர்ந்தால் மூக்கடைப்பு குணமாக்கும்.
Tags:
TASTE PRODUCTS