வரலாறு:-
மாதுளை சிறுமர இனத்தைச் சோ்ந்த பழமரமாகும். 5000 ஆண்டுகளாக ஈரானிலும், ஆப்கானிஸ்தானிலும், பலுகிஸ்தானத்திலும் பயிரிடப்பட்டு வருகிறது.இருந்தாலும் இதன் தாயகம் ஈரான் என்று சொல்லப்படுகிறது.மாதுளையின் பூ, பிஞ்சு,மற்றும் பழம் நிறத்திலும் வடிவத்திலும் மிகுந்த அழகு மிக்கவை.
ஊட்டச்சத்து:-
கலோரி - 234
புரத சத்து - 4.71 கிராம்
நார்ச்சத்து - 11.3 கிராம்
இரும்பு சத்து - 0.85 மில்லி கிராம்
கால்சியம் - 28 மில்லி கிராம்
சோடியம் - 3 மில்லி கிராம்
பொட்டாசியம் - 236 மில்லி கிராம்
சர்க்கரை - 14 கிராம்
வைட்டமின்:-
வைட்டமின் B, C, K.
நன்மைகள்:-
1. மாதுளை பல நோய்களைக் கட்டுப்படுத்தி உடலை வளமாக்க பயன்படுகின்றது. மாதுளையில் இலை, பூ, பிஞ்சு, பழம், வேர், பட்டை ஆகிய அனைத்து பாகங்களும் மருத்துவத்தில் பயன்படுபவை.
2. பூ, பழத்தோல், பட்டை ஆகியவை துவர்ப்புச்சுவையும், குளிர்ச்சித்தன்மையும் கொண்டவை. பழம் இனிப்புச்சுவையும், குளிர்ச்சித்தன்மையும் கொண்டவை. பூ, பழத் தோல் ஆகியவை இரத்தப் போக்கைக் கட்டுப்படுத்தும். துவர்ப்புச்சுவையைக் கூட்டும். பழம் குளிர்ச்சி உண்டாக்கும். பூ பசியைத் தூண்டும். மரப்பட்டை வயிற்றுப்புழுக்களை வெளியேற்றும். விதை ஆண்மையை பெருக்கும். குடல் புழுக்களைக் கொல்லும்.
3. மயக்கம், தலைசுற்றல், தொண்டை வறட்சி, புளிச்சயேப்பம், வாந்தி தீர மாதுளம் பழச்சாறு 100மி அளவு காலையிலும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வேண்டும். பிரயாணத்தின் போது சிலருக்கு வாந்தி வருவது போன்ற உணர்வு ஏற்படலாம். அப்போதும் இதனை சாப்பிட்டு பயன் பெறலாம்.
4. மாதுளம் பழச் சாறு குடிப்பது கர்ப்ப காலத்தில் ஏற்படும் வாந்தி உடனே நிற்க்கும். கர்ப்ப காலத்தில் சில பெண்களுக்கு இரத்த சோகையும் ஏற்படக் கூடும். இதற்கும் மாதுளம் பழச்சாறு உகந்தது. நோய்வாய்ப்பட்ட பின்னர் ஏற்படும் உடல் சோர்வைப் போக்க மாதுளம் பழச்சாறுடன் சிறிதளவு கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு குணம் பெறமுடியும்.
5. மாதுளை பிஞ்சை நன்றாக அரைத்து பசைபோலச் செய்து கொண்டு நெல்லிக்காய் தேவையான அளவு, ஒரு டம்ளர் மோருடன் கலந்து குடிக்க வேண்டும். ஒரு நாளைக்கு 3 வேளைகள் இவ்வாறு செய்தால் வயிற்றுப் போக்கு, பேதி நிறுத்தும்.
6. மாதுளை பூச்சாறு 15மி சிறிதளவு கற்கண்டு சேர்த்து காலையில் மட்டும் குடித்து வர வேண்டும். 2 வாரங்கள் தொடர்ந்து செய்துவர இரத்த மூலம் கட்டுப்படும்.
7. ஒரு டம்ளர் அளவு பழச்சாற்றை தேவையான அளவு கற்கண்டு சேர்த்து காலையில் குடிக்க உடல் குளிர்ச்சி பெறும்.
8. மாதுளம் பூக்களைச் சேகரித்து உலர்த்தி தூள் செய்து வைத்துக் கொள்ளவும். இதனை ½ தேக்கரண்டி அளவு ¼ டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து, வடிகட்டி வாய் கொப்பளித்து வர வாய்ப்புண், தொண்டை இரணம், வலி தீரும்.
. பற்களையும், ஈறுகளையும், பாதுகாக்க மாதுளம் பழம் சாப்பிடுவது மிகவும் அவசியமாகும்.
பக்க விளைவுகள்:-
1. அறுவை சிகிச்சைக்கு முன் சாப்பிடுவதை தவிர்க்கவும்.
Tags:
FRUITS