வரலாறு:-
சாதிக்காய் அல்லது ஜாதிக்காய் (Nutmeg) எனப்படுவது மிரிஸ்டிகா இனத்தைச் சேர்ந்த பல மரங்களில் ஒன்று. இந்தோனேசியாவின் மொலுக்காஸ் அல்லது ஸ்பைஸ் தீவுகளில் உள்ள பான்டா தீவுகளைப் பிறப்பிடமாகக்கொண்ட பசுமையான மரமான, மிரிஸ்டிகா ஃபிராக்ரன்ஸ் இவ்வினத்தைச் சேர்ந்த வணிக முக்கியத்துவம் வாய்ந்த மரமாகும். சாதிக்காய்ப்பழம், சாதிக்காயின் மேல் ஓடு போன்றவற்றிலிருந்து பெறப்படும் இரண்டு நறுமணப் பொருள்களால் சாதிக்காய் மரம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
நன்மைகள்:-
1. ஹோமியோபதி எனும் ஜெர்மனி மருத்துவத்தில் ஜாதிக்காயிலிருந்து வீரியப்படுத்தி (பொடன்சி) தயாரிக்கப்பட்ட மருந்தின் பெயர் நக்ஸ்மாஸ்சாடா எனப்படும் இம்மருந்து சில மன நோய்க்குறிகளுக்கும் சில நோய்களை குணப்படுத்த பயன்பட்டு வருகிறது.
2. ஜாதிக்காயை நன்கு தூளாக அரைத்து கொண்டு தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு சூடான பசும்பாலில் அரை தேக்கரண்டி அளவு கலக்கி சாப்பிட்டு வர தூக்கமின்மை பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களுக்கு நன்றாக தூக்கம் வரும்.
3. ஜாதிக்காய்த் தூளை சிறிது நீரில் போட்டு ஊற வைத்து குடித்து வந்தால் நா வறட்சி சரியாகும்.
4. ஜாதிக்காயின் விதைகளின் மேல் சூழ்ந்துள்ள சிவப்பு நிற திசு ஜாதிபத்ரி எனப்படுகிறது. ஜாதிக்காய் மற்றும் ஜாதிபத்ரி வயிற்றுப் போக்கு, உப்புசம், குடல்வலி, ஆகியவற்றினை போக்க உதவுகிறது.
5. பிறந்த குழந்தைகளுக்கு வயிறு உப்புசம் ஏற்படாமல் இருக்க ஜாதிக்காய் விதையை அரைத்து குடிக்க கொடுப்பார்கள்.
6. ஜாதிக்காய், சுக்கு மற்றும் ஓமம் மூன்றின் பொடி ஜீரணத்திற்கு சிறந்த மருந்தாகும், ஜாதிக்காய் உடலை வலிமையாக்கும்.
7. ஜாதிக்காய் எண்ணெய்(தைலம்), பல்வலி, வாத நோய் ஆகியவைகளுக்கு வெளி உபயோகத்திற்கு பயன்படுகிறது.
8. இனப்பெருக்க நரம்பு மண்டலங்களை பாதித்து ஆண்மை குறைவு மற்றும் மலட்டுத்தன்மை போன்ற குறைபாடுகளை ஏற்படுத்துகிறது. இப்படியான நிலையிலுள்ள ஆண்கள் தினமும் இரவு உறங்கும் முன்பு பாதாம் பருப்பை அரைத்து, பசும்பாலில் கலக்கி அதனுடன் சிறிது ஜாதிக்காய் தூளை சேர்த்து ஒரு மண்டலம் அல்லது 48 நாட்கள் அருந்த நரம்புகள் வலுப்பெற்று ஆண்மைக்குறைவு மற்றும் மலட்டுத்தன்மை நீங்கும்.
முகத்தை அழகாக்கும்:
ஜாதிக்காயை சந்தனத்துடன் அரைத்து பருக்கள் மீதும், முகத்தில் உள்ள கரும் தழும்புகள் மீதும் பூசிவந்தால் பருக்கள் நாளடைவில் மறையும், முகம் பொலிவடையும். ஜாதிக்காயினை அரைத்து தயாரித்த பசை தேமல், படை போன்ற தோல் வியாதிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
அம்மை கொப்புளங்கள் சரியாகும்:
அம்மை நோயின் போது ஜாதிக்காய், சீரகம், சுக்கு போன்றவற்றை பொடி செய்து உணவிற்கு முன் சிறிது எடுத்துக் கொண்டு வந்தால் அம்மைக் கொப்புளங்கள் மறையும்.
தசைப்பிடிப்பை நீக்கும்:
1. ஜாதிக்காயின் விதை வாந்தியை தடுக்கக் கூடியது. ஜீரணத்தை சக்தியை அதிகரிக்கும். தசை வலியினைப் போக்குகிறது. விதையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் மூட்டுவலி, பக்கவாதம் ஆகியவற்றிற்கு பயன்படுகிறது.
2. கொலராநோயின் பொழுது ஏற்படும் தசைப்பிடிப்பினை போக்க மேல் பூச்சாக உதவுகிறது. இதனுடைய வடிநீர் காலரா நோயாளிகளின் தண்ணீர் தாகத்தினைச் சரிப்படுத்தும்.
பக்க விளைவுகள்:-
ஜாதிக்காய் அதிகம் சாப்பிட்டால் மலச்சிக்கல் உண்டாகும் என்பதையும் கருத்தில்கொள்ள வேண்டும்.
Tags:
TASTE PRODUCTS