வரலாறு:-
வேம்பு அல்லது வேப்பை (Azadirachta indica, Neem) இந்தியா, இலங்கை, பர்மா போன்ற நாடுகளில் வளரும் மிகவும் பயனுள்ள ஒரு மரம். இதன் மருத்துவ பண்புகள் கருதி, ஒரு மூலிகை என்றும் வகைப்படுத்தலாம். வேப்ப மரம் நன்றாக வளர்ந்து நிழல் தர வல்லது. அதன் இலைகள் கிருமிகளை அழிக்கும் அல்லது அணுகவிடா தன்மை கொண்டவை என்று கருதப்படுகின்றது.
நன்மைகள்:-
1. இரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரையைக் குறைத்து, சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டில் வைக்கும்.
2. குழந்தைகள் அதிகம் அவதிப்படுக்கூடிய குடல் புழுக்களை அழித்து பிரச்சனையில் இருந்து விடுவிக்கும்.
3. வயிற்றுப்போக்கால் அவஸ்தைப்படுபவர்களுக்கு, வேப்பிலை நல்ல நிவாரணத்தை வழங்கும்.
4. சளி பிடித்திருப்பவர்களுக்கு வேப்பிலை உடனடி நிவாரணத்தை வழங்கும். சளியில் இருந்து விரைவில் விடுபட 7 வேப்பிலையை 3 டம்ளர் நீரில் போட்டு நன்கு சுண்ட காய்ச்ச வேண்டும். பின் அதை குளிர வைத்து வெதுவெதுவெதுப்பான நிலையில் குடிக்க வேண்டும்.
5. வேப்பிலை இரத்தத்தின் அடர்த்தியை அதிகரிக்கும் நச்சுப் பொருட்கள், கிருமிகள் போன்றவற்றை அழித்து, இரத்த அடர்த்தியைக் குறைத்து மெலிதாக்கி, உடலில் சுத்தமான இரத்த ஓட்டத்தை மென்மையாக வைத்துக் கொள்ளும்.
அம்மை நோய்:
கோடைகாலங்களில் அதிக உஷ்ணத்தாலும், சில கிருமிகளின் தொற்றாலும் சிலருக்கு தட்டம்மை, பெரியம்மை, சின்னம்மை போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. இத்தகைய காலங்களில் வேப்பிலைகளை நன்கு அரைத்து, உடல் முழுவதும் பூசி, சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். பின்பு குளிர்ந்த நீரில் மஞ்சள் மற்றும் வேப்பிலைகளை ஊற வைத்து, அந்த நீரை ஊற்றி குளிக்க அம்மை குணமாகும்.
விஷ முறிவு:
வேப்பிலை கொழுந்துகளை தினந்தோறும் சாப்பிட்டு வருபவர்களுக்கு அவர்களின் ரத்தத்தில் நோய் எதிர்ப்பு திறன் அதிகருக்கும். மேலும் பாம்பு மற்றும் இதர விஷ ஜந்துக்களிடம் கடிபடும் பட்சத்தில் வேப்பங்கொழுந்துகளை அதிகம் உண்ண விஷம் உடலில் வேகமாக பரவுவதை கட்டுப்படுத்தும். இதற்கு பின்பு முறையான விஷ நீக்க சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.
தோல் வியாதிகள்:
நமது தோலில் வேர்க்குரு, அரிப்பு, படை, தேமல் போன்ற பல வகையான நோய்கள் ஏற்படுகின்றன. வேப்பிலைகள் மற்றும் அதன் பூக்களை நன்றாக அரைத்து வாரத்திற்கு ஒரு முறை உடலெங்கும் பூசி, அது காய்ந்த பின்பு சற்று இதமான நீரில் குளித்து வர பல தோல் சம்பந்தமான வியாதிகள் நீங்கும்.
புற்று நோய்:
வேப்பிலைகளில் இருக்கும் காரத்தன்மை புற்று நோய் செல்களை அழிக்கும் திறன் கொண்டது. சிறிது வேப்பிலை கொழுந்துகளை நன்றாக அரைத்து, மாதுளம் பழச்சாற்றுடன் கலந்து அருந்தி வருபவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிகும். புற்று நோய் பாதிப்பிலிருந்து காக்கும். அதிலும் குறிப்பாக ஆண்களுக்கு வரும் விந்தக புற்று மற்றும் பெண்களுக்கு வரும் கருப்பை புற்றிலிருந்து காக்கும்.
பல் பிரச்சனைகள்:
வேப்பிலைகளை பச்சையாக மென்று தின்ன அதன் சாறுகள் ஈறுகளில் படும் போது ஈறு சம்பந்தமான பிரச்சனைகளை நீக்கும். பற்களில் சொத்தை ஏற்படாமல் இருக்கும். வாய் துர்நாற்றத்தையும் போக்கும்.
சுவாச கோளாறுகள்:
தினமும் காலையில் வெறும் வயிற்றில் வேப்பிலைகளை சாப்பிட்டு வருபவர்களுக்கு நுரையீரல் ஆரோக்கியத்துடன் இருக்கும். வெளிப்புற கிருமி தொற்றால் ஏற்படும் நுரையீரல் மற்றும் சுவாச சம்பந்தமான நோய்கள் ஏற்படாமல் காக்கும்.
புண்கள்:
வேப்பிலை இயற்கையாக கிடைக்கும் ரசாயன கலவையில்லாத ஒரு கிருமி நாசினியாகும். ரத்த காயங்களில் ரத்தம் வடிவது நின்ற பின் வேப்பிலைகளை நன்றாக அரைத்து, அதன் சாற்றை காயங்களில் விட தொற்று கிருமிகளை அழித்து காயத்தை வேகமாக ஆற்றும்.
Tags:
LEAVES