Mudakkathan - முடக்கத்தான் கீரை பயன்கள் மற்றும் மருத்துவ குணங்கள்


நன்மைகள்:-

1. இந்தக் கீரையை விளக்கெண்ணெயில் வதக்கி உண்டால் மூட்டுவலி, கைகால் வலி, முதுகு வலி, உடல் வலி ஆகிய அனைத்து வலிகளும் அகலும்.

2. முடக்கத்தான் கீரையுடன் வெல்லம் சேர்த்து நெய்யில் வதக்கி உட்கொண்டால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.

3. இந்தக் கீரையை அரைத்து கர்ப்பிணிப் பெண்களின் அடிவயிற்றில் கட்டினால் சுகப்பிரசவமாகும்.

4. முடக்கத்தான் கீரையைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் மலச்சிக்கல், மூல நோய், கரப்பான், கிரந்தி, பாதவாதம் போன்ற நோய்கள் குணமாகின்றன.

5. இந்தக் கீரையின் சாற்றைக் காதில் விட்டால் காது வலி நிற்கும். கட்டிகளில் வைத்து கட்டினால் அவை உடைந்து புண் ஆறும்.

6. வாய்வுத் தொல்லையுடையவர்கள் முடக்கத்தான் கீரையை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

7. மாதவிடாய் நிற்கும் நிலையில் உள்ள பெண்களுக்கு இந்தக் கீரை நல்லது. பெண்களின் மாதவிடாய் தொடர்பான பிரச்னைகளுக்கு இந்தக் கீரையின் சாறு ஒரு மேஜைக்கரண்டி போதும்.

8. முடக்கத்தான் கீரை தோல் வியாதிகளுக்கு சிறந்த நிவாரணமாக இருக்கிறது. முடக்கத்தான் கீரையை நன்றாக மை போல் அரைத்து கொண்டு அதை சொறி, சிரங்கு போன்ற தோல் வியாதிகள் இருக்கும் இடங்களில் பற்று வைத்து வர நல்ல நிவாரணம் கிடைக்கும்.

9. நார்ச்சத்து குறைவாக உள்ள உணவுகள் உண்பது, நீண்ட நாள் மலச்சிக்கல் போன்ற காரணங்களால் சிலருக்கு மூலம் நோய் ஏற்படுகிறது. இவர்கள் தினமும் பச்சையாக சிறிது முடக்கத்தான் கீரைகளை சாப்பிட்டு வந்தால் மூல நோய் விரைவில் குணமாகும்.

10. புற்று நோயாளிகளுக்கு அவர்களின் உடலின் புற்று செல்கள் தொடர்ந்து உற்பத்தியாகிக் கொண்டேயிருக்கும். முடக்கத்தான் கீரையை புற்று நோயாளிகள் சாப்பிட்டு வந்தால் புற்று செல்கள் மீண்டும் வளராமல் தடுத்து, அந்நோயின் கடுமை தன்மையை குறைக்க முடியும்.

11. ஜலதோஷம் மற்றும் இன்ன பிற காரணங்களால் சிலருக்கு கடுமையான தலைவலி ஏற்படுகிறது. தலைவலியால் அவதிப்படுபவர்கள் முடக்கத்தான் இலைகளை நன்கு கசக்கி, வெண்ணீரில் போட்டு ஆவி பிடித்தால் தலைவலி நீங்கும்.

12. தலைமுடி சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம். இன்று பெரும்பாலானவர்களுக்கு தலையில் பொடுகு ஏற்படுகிறது. இப்படிப்பட்டவர்கள் முடக்கத்தான் இலைகளை கொண்டு செய்யப்பட்ட எண்ணையை தலைக்கு தடவி வந்தால் பொடுகு தொல்லை நீங்கும்.

13. “ஹைட்ரோஸீல்” எனப்படும் விரைவீக்கம் ஆண்களுக்கு விரைப்பைகளில் நீர் கோர்த்துகொள்வதால் ஏற்படும் ஒரு வியாதியாகும். இப்பாதிப்பால் அவதிப்படுபவர்கள் தினந்தோறும் முடக்கத்தான் கீரையின் இலைகளை விரைபையின் மீது வைத்து, துணியால் கட்டு போட்டு வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.


 

Sobiya Sofi

You Hate When People See You Cry Because You Want To Be That Strong Girl. At The Same Time, Though, You Hate How Nobody Notices How Torn Apart And Broken You Are.

Post a Comment

Previous Post Next Post