வரலாறு:-
விளக்கெண்ணெய் (castor oil) என்பது ஆமணக்கு விதைகளில் (ricinus communis) இருந்து எடுக்கப்படும் ஒரு தாவர எண்ணெய் ஆகும். இது பிற எண்ணெய்களை விட அடர்த்தி அதிகமாகக் காணப்படுகிறது. எனவே சற்று பிசுபிசுப்புடன் காணப்படும். இதன் கொதிநிலை 313 °C (595 °F), அடர்த்தி 961 கிகி/மீ3. விளக்கெண்ணெய் குளிர்ச்சி தரக்கூடியது. மருத்துவப்பயன்கள் நிறைந்தது. பேதி மருந்தாகப் பயன்படுகிறது.
நன்மைகள்:-
1. விளக்கெண்ணையை உடலின் அனைத்து மூட்டு பகுதிகளில் தடவி வந்தால் வலி ஏற்படுவது நீங்கும். ஆர்த்ரைடிஸ் போன்ற தீவிர மூட்டுகள் சார்ந்த பிரச்சனைகள் நீங்கும்.
2. இரவில் சில துளி விளக்கெண்ணையை கண்களின் மீது தடவிக்கொண்டு உறங்க கண்கள் குளிர்ச்சியடையும்.
3. உடலில் பித்த தன்மை அதிகமாகும் நபர்களுக்கு பாத வெடிப்புகள் அதிகம் ஏற்படும். இப்படி பட்ட நபர்கள் தினமும் உறங்க செல்லும் முன்பு விளக்கெண்ணையின் சில துளிகளை பாத வெடிப்புகளின் மீது தடவி வந்தால் விரைவில் பாத வெடிப்புகள் நீங்கும்.
4. உடலின் எப்பகுதியிலாவது சிராய்ப்புகள், வெட்டுக்கள் போன்றவை ஏற்பட்டால் அந்த இடத்தில் ரத்த கசிவு ஏற்பட்டு சிறிது நேரத்தில் நின்றாலும் நாளாவட்டத்தில் அந்த இடம் புண்ணாகி விடுகிறது. விளக்கெண்ணையின் சில துளிகளை தினமும் அடிபட்ட புண்களின் மீது விட்டு வந்தால் புண்கள் விரைவில் குணமாகும்.
5. விளக்கெண்ணையின் சில துளிகளை தேங்காய் எண்ணையுடன் கலந்து தலை முடிக்கு தேய்த்து வந்தால் தலை முடி உதிர்வது நிற்கும். மிக இளம் வயதிலேயே தலை முடி நரைத்தல் போன்ற பிரச்சனைகளும் தீரும்.
6. மலச்சிக்கல் பிரச்சனை தீவிரமாக இருப்பவர்கள் விளக்கெண்ணையின் சில துளிகளை இரவு தூங்குவதற்கு முன்பு அருந்தினால் காலையில் சுலபத்தில் மலம் கழிக்க உதவும். இம்முறையை தினமும் கடைபிடிக்க கூடாது.
7. விளக்கெண்ணையின் சில துளிகளை வீக்கம் ஏற்பட்ட இடங்களில் தடவி, அந்த இடத்தின் மீது ஒத்தடம் கொடுக்க வீக்கம் விரைவில் குறையும்.
8. விளக்கெண்ணையின் சில துளிகளை இந்த சொறி, சிரங்கு, அரிப்பு ஏற்பட்ட இடங்களின் மீது விட்டு நன்கு தடவி வந்தால் இப்பிரச்சினைகள் விரைவில் நீங்கும்.
தாய்ப்பால்:
குழந்தை பெற்று தாய்ப்பால் புகட்டும் நிலையில் இருக்கும் சில தாய்மார்களுக்கு சமயங்களில் அவர்களின் மார்பகங்களில் தாய்ப்பால் கட்டிக்கொண்டு பால் சுரப்பு ஏற்படாமல் போகும். அப்படியான சமயங்களில் விளக்கெண்ணையை இளம் சூடான பதத்தில் காய்ச்சி, பெண்களின் மார்பகங்களின் மீது தடவி, ஒத்தடம் கொடுக்க மீண்டும் தாய்ப்பால் சுரப்பு ஏற்படும்.
Tags:
OIL