வரலாறு:-
ஏலம் (Elettaria cardamomum) என்னும் மருந்துச்செடி இஞ்சிச் செடிக் குடும்பத்தைச் (Zingiberaceae) சேர்ந்த ஒரு செடியினம். இஞ்சிக் குடும்பத்தில் உள்ள இரண்டு பேரினங்கள்: சிரிய ஏலக்காய் எலெட்டாரியா (Elettaria), பெரிய ஏலக்காய் அமோமம் (Amomum). இவை இரண்டும் மணம் மிக்க கரிய விதைகளும், அதனைச் சூழ்ந்த மென்புறத் தோலும் முப்பட்டகமான மேல்தோலும் கொண்ட காய்களைக் கொண்டவை.
ஊட்டச்சத்து:-
ஈரப்பதம், புரதம், மாவுப்பொருள், நார்ச்சத்து மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற முக்கிய தாது உப்புக்களும் கலந்துள்ளன.
நன்மைகள்:-
1. செரிமானத்தை தூண்டுவதாக, குரல் வளை மற்றும் தோல் தொடர்பான பிரச்சினைகளுக்கு. மலட்டு தன்மை மற்றும் அரைகுறை விந்து வெளிபடுதலை தீர்ப்பதற்கும். ஏலக்காய், ஆண்மைக் குறைவு, பெண்மைக் குறைவும் நீக்கி குழந்தைப் பாக்கியமும் உண்டாக்க வல்லது.
2. பலர் அறியாத செய்தி. இது தாம்பத்திய வாழ்வில் இனிமை சேர்க்கவல்லது.
3. பல் மற்றும் அதனை சார்ந்த நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.
4. ஏலக்காயை பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டால் நரம்பின் பலம் கூடும், கண்பார்வை அதிகரிக்கும்.
5. ஏலப்பொடி, சீரகப்பொடி, சோம்புப் பொடி ஆகிய மூன்றையும் 5 கிராம் வீதம் எடுத்து கலந்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால் பசி கூடும், ஜீரணம் அதிகரிக்கும்.
6. ஏலத்தை பொடியாக்கி துளசிச் சாற்றுடன் கலந்து உட்கொண்டால் வாந்தி நிற்கும்.
7. ஏலக்காய் 4, ஒரு துண்டு சுக்கு ஆகியவற்றை சேர்த்து அரைத்து நீர் விட்டு கொதிக்க வைத்து பருகினால் வறட்டு இருமல், தொண்டை வலி ஆகியவைகள் தீரும்.
8. ஒரு சிட்டிகை ஏலக்காய்த்தூளை அடித்தொண்டை அழற்சி, தொண்டைக்கட்டு, உள்நாக்கில் வலி, குளிர்காய்ச்சலால் ஏற்படும் தொண்டைக்கட்டு முதலியவற்றைக் குணப்படுத்தி ஏலக்காயும், இலவங்கப்பட்டையும் சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரால் கொப்பளித்தால் தொண்டைக்கு இதமாக இருக்கும்.
9. நெஞ்சில் சளி உள்ளவர்கள் அடிக்கடி இருமி அவதிப்படாமல் இருக்கவும் உதவும்.
10. ஜீரணமாகாதபோது வரும் தலைவலியை ஏலக்காய் சேர்ந்த ஒரு கப் தேநீர் விடுவிக்கும்.
11. ஏலக்காய் 4, கிராம்பு 4, வெற்றிலைக்காம்பு 5 ஆகியவைகளை பால் விட்டு அரைத்து சூடாக்கி நெற்றியில் பத்து போல் போட்டால் தலைவலி, சளி விலகும்.
12. அடிக்கடி விக்கல் எடுத்தால் ஒரு கப் தண்ணீரில் இரண்டு மூன்று ஏலக்காயைத் தட்டி உள்ளே போடவும். பிறகு புதினாக் கீரையில் 5(or)6 இலைகள் மட்டும் இதில் போட்டுக் கொதிக்கவிடவும். பிறகு வடிகட்டி அருந்தினால் விக்கல் எடுப்பது குறையும்.
13. கராம்பு, இஞ்சி, பெருஞ்சீரகம் ஆகியவற்றுடன் சேர்த்து பொடியாக்கி உட்கொள்வதால் அஜீரணத் தொல்லையில் இருந்து விடுபடலாம்.
14. ஏதோ ஒரு பிரச்சனையின் காரணமாக பலரும் மன அழுத்தத்திற்கு ஆளாகுகின்றார்கள் இன் நிலையில் ஏலக்காய் tea குடித்தால் அதிலிருந்து இயல்பு நிலைக்கு வரமுடியும்.
15. நாவரட்சி, வாந்தி நெஞ்சுச் சளி, தலைவலி, வாயில் உழிழ்நீர் ஊறுதல் போன்ற பிரச்சனைகள் இருக்கும் போது மட்டும் ஏலக்காயை வாயில் போட்டு மென்றால் உடனடியான தீர்வு கிடைக்கும்.
16. தடிமனினால் வரும் மூக்கடைப்பினால் குழந்தைகள் பெரிதும் அவதிப்படுவார்கள் அந்த சமயத்தில் ஏலக்காயை நெருப்பில் போட்டு இதில் இருந்து வரும் புகையை குழந்தைகளுக்கு சுவாசிக்கக் கொடுத்தால் மூக்கடைப்பு குணமாகி விடும்.
17. வாய்வுத் தொல்லையால் அல்லல்படுவோர் 1\2 டிஸ்பூன் ஏலக்காய் பொடியுடன் 1\2 டம்ளர் தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து உணவு உண்பதற்கு முன்னர் அருந்தினால் வாய்வுத்தொல்லை இருக்காது.
18. ஏலக்காய் பொடியுடன் தேன் கலந்து மூன்று வேளை குழந்தைகளுக்குக் கொடுத்துவர அவர்களுக்கு ஏற்படும் வயிறுப் போக்கு நின்று விடும்.
பக்க விளைவுகள்:-
குறிப்பாக ஏலக்காயை அடிக்கடி வாயில் போட்டு மெல்வது நல்லதல்ல
Tags:
TASTE PRODUCTS