வரலாறு:-
‘தாமரின்டஸ் இண் டிகா’ என்ற அறிவியல் பெயர் கொண்ட புளி பேபேசி இனத்தைச் சேர்ந்த ஒரு மரம். இதன் கனி புளிப்புச் சுவை கொண்டது. தாய்லாந்தில் இனிப்பான பழங்களை நல்கும் புளிய மர வகைகள் உள்ளன. இது தென்னிந்தியச் சமையலில் பயன்படுத்தப்படும் முக்கியமான பொருட்களில் ஒன்றாகும்.
ஊட்டச்சத்து:-
புளியங்க்கொட்டையில் 63% மாவுப்பொருட்களும்
14 - 18% ஆல்புமினும்
4.5 - 6.5 % பாதி உலரும் எண்ணெய்யும்
கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன
வைட்டமின்:-
வைட்டமின் பி.
நன்மைகள்:-
1. புளிய மரத்தின் இலை, பழம், பட்டை எல்லாமே மருத்துவத்திற்கு பயன்படுகிறது. பிலிப்பைன்ஸில் இலைகள் ‘டீ’ யாக தயாரிக்கப்பட்டு, ஜுரம் தணிய உபயோகப்படுத்தப்படுகிறது. வயிறு, ஜீரணக்கோளாறுகளுக்கு மருந்தாகிறது.
2. புளி நீரில் கரைத்து உப்பு சேர்த்து கொதிக்க வைத்து இளம் சூட்டில் பற்றுப்போட ரத்தக் கட்டுகள் கரையும். புளியந் தண்ணீரை கொப்பளித்தால் வாய்ப்புண்கள் குறையும்.
3. புளியுடன் சுண்ணாம்பு கலந்து குழப்பி சூட்டோடு தேள் கொட்டிய இடத்தில் போட, தேள் விஷம் இறங்கும்.
4. புளியங்கொட்டை பருப்பை இடித்து பொடியாக்கி, பசும்பாலில் அரைக்கரண்டி தூளைபோட்டு கற்கண்டு கலந்து குடித்து வர தாதுவிருத்தி உண்டாகும்.
5. புளியங்கொழுந்துடன் பருப்பு சேர்த்து செய்த கூட்டை சாப்பிட்டு வர உடல் நலம் பெறும்.
6. புளியம் பூக்களை துவையலாக அரைத்து உண்டால் மயக்கம், தலைச்சுற்றல் தீரும். மேலும் இதை அரைத்து கண்ணை சுற்றி பற்றுப்போட்டால் கண் வலி, கண் சிவப்பு குணமாகும்.
7. புளியமர வேர்களிலிருந்து தயாரிக்கப்படும் மருந்துகள் குஷ்டரோகத்திற்கு உபயோகப்படுகின்றன.
8. உடல் சூட்டை தணிக்கும் சிறந்த மருந்து, மலச்சிக்கலால் அவதிப்படுபவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும், கண் எரிச்சல் சீக்கமே சரியாகிவிடும், மலேரியா வருவதை தடுக்கும்.
9. இரத்தத்தை சுத்திகரிக்க உதவும். மஞ்சள் காமாலை ஜலதோஷம் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களை விரட்டும் தன்மை கொண்டது.
புளிக் குழம்பு:
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடலை பருப்பு , அரிசி, காய்ந்த மிளகாய், சின்ன வெங்காயம் , தக்காளி சேர்த்து பொன்னிறமாக நன்கு வதக்கவும். பின்னர் இதனை ஆற வைத்து அரைத்து கொள்ளவும். மற்றொரு வாணலியில் ஊற்றி கடுகு, சின்ன வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக நன்கு வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கிய பின், உரித்த பூண்டு பற்களை(இரண்டாக கீறி கொள்ளவும்) சேர்த்து வதக்கவும். இந்த கலவை நன்கு வதங்கியதும் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து, தக்காளி மசியும் வரை வதக்கவும். பின்னர் அரைத்த தக்காளி - வெங்காய கலவை, மல்லி பொடி, ஒரு குழி கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இவையனைத்தும் வதங்கியதும், அரைத்த தேங்காய், தேவைக்கேற்ப புளிக்கரைசல் மற்றும் தண்ணீர் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை கொதிக்க வைத்து இறக்கினால் புளிக் குழம்பு ரெடி.
Tags:
TASTE PRODUCTS