வரலாறு:-
குதிரைவாலி (அல்லது) புல்லுச்சாமை (horse-tail millet, barnyard millet, panicum verticillatum, Echinochloa frumentacea)(இந்திய தினை) புற்கள் வகையைச் சார்ந்த தாவரம் ஆகும். இது ஒருவகைப் புன்செய் பயிர். இந்த சிறுதானியம் உலகில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் போன்ற நாடுகளில் காணப்படுகிறது.
ஊட்டச்சத்து:-
புரதம் – 6.2
சக்கரை – 65.5
கொழுப்பு – 4.8
மினரல் – 3.7
கொழுப்பு – 13.6
கால்சியம் – 22
பாஸ்பர்ஸ் – 280
இரும்புசத்து - 18.6
தையமின் – 0.33
நையஸின் – 4.2
நன்மைகள்:-
1. குதிரைவாலியில் சர்க்கரை நோயைக் (Diabetes) கட்டுப்படுத்தும் தன்மை உண்டு.
2. செரிமான குறைகள் (Digestion problem), ரத்தசோகை(Anemia) முதலியவற்றைக் குணப்படுத்துகிறது.
3. சிறுநீரை அதிகமாகப் பெருக்கும் சக்தி இதற்கு இருப்பதால், உடம்பில் உள்ள உப்பைக் கரைக்கும் தன்மை உண்டு.
4. கண் குறைபாடுகளை(Eye Problems) சீர் செய்யும் ’பீட்டா கரோட்டின்’, இதில் அதிகமாக உள்ளது மற்றும் ஆண்டி ஆக்சிடன்ட்(Anti oxidant) ஆக வேலை செய்கிறது.
5. ஊட்டச்சத்துகள் மிகுந்த குதிரைவாலி அரிசியில் நார்ச்சத்து மற்றும் இரும்பு சத்து அதிகளவு உள்ளது.
6. உடலில் மலச்சிக்கலை தடுப்பதிலும், கொழுப்பு அளவை குறைப்பதிலும் செரித்தலின் போது ரத்தத்தில் இருந்து குளுக்கோஸ் அளவை மெதுவாக வெளியிடுவதற்கும் உதவுகிறது.
7. இதய நோயாளிகள் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவாகப் பயன்படுகிறது.
8. உடலில் கபத்தினுடைய ஆதிக்கம் அதிகரித்து அதனால் அடிக்கடி சளி, காய்ச்சலால் அவதிப்படுவார்கள்.
9. குதிரைவாலி அரிசியை சாதம் செய்து சாப்பிடலாம். இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து அடிக்கடி சளி, காய்ச்சல் ஏற்படாமல் தடுக்கும்.
Tags:
CEREEALS