Turkey Berry - சுண்டைக்காய் பயன்கள் மற்றும் மருத்துவ குணங்கள்


வரலாறு:-

சுண்டை அல்லது பேயத்தி, மலைச்சுண்டை, கடுகி, அமரக்காய் என்பது மூலிகை மருத்துவத்திலும் சமையலிலும் பயன்படும் ஒரு செடியாகும். சுண்டை கத்தரிக் குடும்பத்தைச் சார்ந்த புதர்ச்செடி ஆகும் பொதுவாக 2 முதல் 3 மீட்டர் உயரம் வரை வளர்கிறது. சுண்டையானது ஓரளவு வளரும் பெருஞ்செடி வகையான முட்கள் கொண்ட தாவரம் ஆகும். இதன் இலைகள் அகன்று விரிந்தும் சிறிய பிளவுகள் தென்படுவதாகவும் இருக்கும். இது வெள்ளை நிறப் பூக்களைக் கொண்டதாகவும், கொத்துக் கொத்தாகக் காய்க்கும் காய்களைக் கொண்டதாகவும் இருக்கும்.


ஊட்டச்சத்து:-

கலோரி - 81
புரத சத்து - 0 கிராம்
நார்ச்சத்து - 5.7 கிராம்
இரும்பு சத்து - 22.5 மில்லி கிராம்
கால்சியம் - 390 மில்லி கிராம்

வைட்டமின்:-

வைட்டமின் B, C.


நன்மைகள்:-

1. சுண்டை காய் வெப்பத் தன்மை கொண்டது. தொண்டைச் சளியைக் குறைக்கும், வயிற்றுப் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும், பசியை அதிகமாக்கும்.

2. தேவையான அளவு சுண்டைக்காயை, மோரில் நன்கு மூழ்கியிருக்குமாறு ஊறவைத்து, வெயிலில் காயவைத்து, வற்றலாகச் செய்துக் கொள்ள வேண்டும். இந்த சுண்டை வற்றலை தூள் செய்து கொண்டு, ¼ தேக்கரண்டி அளவில், தினமும், காலை, மாலை வேளைகளில், வெந்நீருடன் உட்கொள்ள வயிற்றுப்புழுக்கள் வெளியேறும்.

3. சுண்டை வற்றல், நெல்லி வற்றல், சுக்கு, வெந்தயம், ஓமம், மாதுளை ஓடு, மாம்பருப்பு, கறிவேப்பிலை, சீரகம் இவற்றை சம எடையாக எடுத்து, நன்கு காயவைத்து, வறுத்து, இடித்துத் தூள் செய்துக் கொள்ள வேண்டும். இதனை, 2 சிட்டிகை அளவு, 1 டம்ளர் மோருடன் கலந்து சாப்பிட்டுவர வேண்டும். காலை, மாலை வேளைகளில், 2 நாட்களுக்கு இவ்வாறு செய்துவர பேதி கட்டுப்படும்.

4. சுண்டைக்காய் வற்றல் தூள், 2 சிட்டிகை அளவு, 1 டம்ளர் மோரில் கலந்து பகலில் மட்டும் குடிக்க அஜீரணம் குணமாகும்.

5. பச்சையான இளம் சுண்டைக்காய்களை குழம்பு செய்து, சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டுவர மூலம் கட்டுப்படும்.

6. சுண்டைக்காய் காரக்குழம்பு இன்றும் பிரபலமான ஒன்று. பிஞ்சு சுண்டைக்காயைச் சமைத்து சாப்பிட்டு வந்தால் தொண்டையில் உள்ள சளிக்கட்டு குறையும். இரத்தம் சுத்தமாகும்.

7. சுண்டைக்காய்க் குழம்பு எலும்புகள் உறுதியடையவும், நாக்கின் சுவை உணர்ச்சியை அறியும் திறனை அதிகமாக்கவும். மேலும், குரல்வளம் அதிகரிக்கவும் பயன்படும்.


பக்க விளைவுகள்:-

ஏதும் இல்லை


 

Sobiya Sofi

You Hate When People See You Cry Because You Want To Be That Strong Girl. At The Same Time, Though, You Hate How Nobody Notices How Torn Apart And Broken You Are.

Post a Comment

Previous Post Next Post