வரலாறு:-
வல்லாரை (Centella asiatica) அல்லது சரஸ்வதி கீரை(Asiatic pennywort, Indian pennywort) ஒரு மருத்துவ மூலிகைப் பயன்பாடுடைய கீரை வகைத்தாவரமாகும். ஆசியா, ஆஸ்திரேலியா போன்ற பகுதிகளுக்கு உரியதாகும்.
ஊட்டச்சத்து:-
இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து மற்றும் தாதுஉப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன
வைட்டமின்:-
வைட்டமின் ஏ, வைட்டமின் சி
நன்மைகள்:-
1. ஞாபக சக்திக்கு இதை விடச் சிறந்த மருந்து வேறு எதுவும் இல்லை.
2. வல்லாரை கீரை உடலில் உள்ள ரத்தத்தை சுத்திரிக்கிறது.
3. தொண்டைக்கட்டு, காய்ச்சல், உடற்சோர்வு, பல் நோய், பசி, தாகம், படை போன்றவற்றைக் குணப்படுத்தும்.
4. இந்த கீரையை கொண்டு பல்துலக்கினால், பற்களின் மஞ்சள் தன்மை நீங்கும்.
5. வல்லாரைக் கீரையை தினம் ஒருகைப் பிடி அளவு எடுத்து அரைத்து, வாயில் போட்டுப் பசும்பால் குடித்து வந்தால், மாலைக் கண் பாதிப்பு படிப்படியாக அகலும்.
6. இளம் பருவத்தினர் காலை வேளைகளில் இதைப் பச்சையாக மென்று தின்று வந்தால், மூளை பலம் பெறுவதோடு மட்டுமலாமல், ஞாபக சக்தியும் அதிகரிக்கும். வல்லாரைத் துவையல் மலச்சிக்கலை அகற்றும்.
7. வல்லாரைக் கீரையையும் மிளகையும் சேர்த்துப் பச்சையாக மென்று தின்று வந்தால், உடல் சூடு தணியும்.
8. வல்லாரை இலையை வாயில் போட்டு மென்று விழுங்கினால் குடல் புண், குடல் நோய், வாய்ப்புண், வாய் நாற்றம் ஆகியவை அகலும்.
Tags:
SPINACH